சில எண்ணங்கள் -10

எண்ணங்கள் பலவிதம்

எந்த கொம்பனாலையும்
எடுக்க முடியாத
வெள்ளை துணிகளில் படியும்
கலர் சாய கரைகளை
சும்மா அசால்ட்டா ஒரே
சலவையில் நீக்கிடுவான்
இந்த கும்கி
AMWAYயின் SA8!!

படம்

பஸ்ஸில் சீட் இருப்பது
போல் கண் கட்டு வித்தை
காட்டினால் அவர்
MAKE MY TRIP.COM
பஸ்ஸில் சீட் இருக்குதா
என்று நோட்டம் விட்டாலே
போதும் அடுத்த நிமிஷமே
கர்சீப் போடாத குறையாய்
ஒரு சீட்டை பிடித்து நம்மை
திக்குமுக்காட வைப்பார்
TRAVELYAARI.COM!!

படம்

 

ஒரு பாவமும் அறியாமல்
தான் உண்டு தன் வேலை உண்டு
என்று தேமேனு இருக்கும் போதும்
நீ இந்த தப்பு பண்ணிட்ட
அந்த தப்பு பண்ணிட்ட என்று
கூசாமல் பொய் சொல்லி
கழுத்தை புடிக்காத குறையாய்
வெளியே தள்ளி விட்டு
அடுத்த நொடியே உள்ள வா வா
என்று அழைக்கும் அவரின் 
சொல்லுக்கு உடன்பட்டு மானம்
கெட்டு நாமும் உள்ளே நுழைந்தால்
அவரே IRCTC!!

படம்

 

நேற்று இரவிலிருந்து
எடுத்ததெற்கெல்லாம்
சள் புள்ளு என்று 
எறிந்து விழும் என்னை
பார்த்த பின் நிச்சயமாக
என் கணவருக்கு புரிந்திருக்கும்
நேற்று இரவு கோமா நிலைக்கு சென்ற
ஸ்டெபிலைசர், இது நாள் வரை
ஃப்ரிஜின் வோல்டேஜை
மட்டும் கண்ட் ரோல் செய்யவில்லை
தன் மனைவியின் மனநிலையையும் 

சேர்த்து தான் என்று!!

படம்

ஸ்கூலுக்கு மட்டம்
போட்டு விட்டு பிள்ளைகள்
பந்தும் கையுமாய்
விளையாட கிளம்பினால் 
.
.
.
.
.
.
.

View original post 22 more words

உலகிலேயே அதி பயங்கரமான அதீதவீரியமிக்க‍ விஷ‌ம் கொண்ட இந்திய தேள் – வீடியோ

vidhai2virutcham-விதை2விருட்சம்

இந்தியாவில் காணப்படும் அனைத்து வகையான தேள் வகையினங் களில் இந்த சிவப்பு தேள் அதாவது செந்தேள்  மிகவும் அபாயகரமானதா கவே கருதப்படுகிறது. இத்தேளில்

View original post 32 more words

“அழுது அடம்பிடித்துச் சாப்பாடு வாங்கிச் சென்ற‌ காமராஜர்!”

vidhai2virutcham-விதை2விருட்சம்

காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது அப்பள்ளி அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் மதிய உண வுக்கு சிறுவன் காமராஜ் வீட்டுக்கு வந்து விடுவார். வீட்டில் அம்மா அவருக்கு உணவ ளிப்பார். அச்சமயத்தில் அவரது பாட்டியும் அவர்களோடு வசித்து வந்தார். பாட்டிக்குக் காமராஜர் மீது கொள்ளைப் பிரியம்.

ஒருநாள் பாட்டியிடம் காமராஜர், “இனிமேல் மதிய உணவைக் கட்டிக் கொடுத்து விடுங்க ள். பள்ளியில் வைத்து சாப்பிட்டுக் கொள்கி றேன்’ என்று கேட்டார். பாட்டியோ, வீடு அருகில் இருப்பதால் அப்ப டித்தர முடியாது, வீட்டுக்கு

View original post 164 more words

வாழ்க! வாழ்க!!

நாலு வரி நோட்டு

வாழ்த்துவதற்கு இதயம் வேண்டும். ஒருவரை உளமாற உணர்வாற “வாழ்க! வாழ்க!!” என்று வாழ்த்துவதற்கும் ஒரு நல்ல இதயம் வேண்டும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரையாவது வாழ்த்திக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது திரைப்படத்தில் வாழ்த்துப்பாடல்கள் வராமலா இருக்கும்!

நல்வாழ்த்து நான் சொல்லுவேன். நல்லபடி வாழ்கவென்று” என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினாரே. ஒருவரை எதற்காக வாழ்த்துகிறோம் என்பதற்கான காரணத்தை இதைவிட சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமா!

சரி. வாழ்த்தை எப்படிச் சொல்ல வேண்டும்? வாழ்க வாழ்க என்று எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரி சொன்னால் அதில் சுவை இருக்காது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்ல வேண்டும். திரைப்படத்தில் கவிஞர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி வாழ்த்தியிருக்கிறார்கள் என்று சில பாடல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வோமா!

முதலில் பிறந்தநாள். கையில் ஒரு பரிசைக் கொடுத்து விட்டு வாழ்க என்றால் சரியாக இருக்கும். ஆனால் அது அந்தச் சூழலின் மகிழ்ச்சியைப் பெருக்குமா? இல்லை. இப்போதெல்லாம் கேக் வெட்டும் போது சுற்றி நின்று அனைவரும் “Happy Birthday To You” என்று பாடும் போது அந்த இடமே மகிழ்ச்சியில் மூழ்கிவிடுகிறது அல்லவா.

அதையே அழகாக “என்னோடு பாடுங்கள். நல்வாழ்த்துப் பாடல்கள்” என்று நான் வாழவைப்பேன் திரைப்படத்தில் இடம் பெற்ற பிறந்தநாள் காட்சிக்காக எழுதினார். எல்லாரும் சேர்ந்து நல்வாழ்த்துப் பாடினால் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்புறும் என்பது வாலியின் கருத்து.

அடுத்தது திருமணம். புதுவாழ்க்கை தொடங்கும்…

View original post 587 more words

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் !!!!

எரிமலை

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை…

View original post 842 more words

திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் !!,நாம் அறியாத உண்மைகள்…!

எரிமலை

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ…..!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள்…

View original post 294 more words

COMPUTER என்ற ஆங்கில‌ வார்த்தையின் விரிவாக்கம் தெரியுமா….?

vidhai2virutcham-விதை2விருட்சம்

என் நண்பன் என்னிடம், “நீ எத்த‍னை ஆண்டுகளாக COMPUTER உபயோகித்து வருகிறாய்?” எனக் கேட்க,
அதற்கு நான், “17 வருடங்களுக்கு மேலாக” என்றேன். இதைக்கேட்ட‍ எனது நண்பன், “அப்ப‍டின்னா 

View original post 58 more words

சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு ஆண் எப்படியிருக்க வேண்டும்?

vidhai2virutcham-விதை2விருட்சம்

சாமுத்திரிகா லட்சணப்படிஎல்லா ஆண்களுக்கும்  எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவனை விட அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல. ஒரு இளம் ஆணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம். ஏற்கனவே சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்? என்பதை பார்த்தோம் இப்போது, சாமுத்திரிகா லட்சணப்படி ஓர் ஆண் எப்ப‍டியிருக்க‍

View original post 517 more words